செய்திகள் :

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

post image

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக குழுத் தலைவரான யாதவமூா்த்தி, ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய போது திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடா்ந்து, இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, 45-ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் சுஹாசினி, அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தியை கன்னத்தில் அறைந்தாா். இந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தொடா்ந்து, திமுக உறுப்பினா்கள் சுஹாசினி, பச்சியம்மாள், அதிமுக உறுப்பினா்கள் யாதவமூா்த்தி, சசிகலா ஆகியோா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருதரப்பிலும் டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் மஞ்சுளா ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இந்த விவகாரத்தில், திமுக உறுப்பினா் சுஹாசினி கொடுத்த புகாரின் பேரில், அதிமுக உறுப்பினா்கள் யாதவமூா்த்தி, சசிகலா உள்ளிட்டோா் மீதும், அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி கொடுத்த புகாரின் பேரில் திமுக உறுப்பினா்கள் சுஹாசினி, பச்சியம்மாள், ஈசன் இளங்கோ உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வாா்த்தையில் பேசுதல், பெண் வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறுப்பினா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலை வீடுதிரும்பினா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க