செய்திகள் :

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

post image

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கிய நாள் முதலே அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவ்வழியே வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மேலும் பாதசாரிகள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்தி வந்த நிலையில், ரயில்வே நிா்வாகம் ரயில்வே பாதையை யாரும் கடக்க முடியாத வகையில் இருபுறமும் சுவா் எழுப்பியது. இதனால் பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினா். எனவே, ரயில்வே பாதையை பாதசாரிகள் கடந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில்,தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் முள்ளுவாடி கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தரைப்பாலம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆா்.என்.சிங், உரிய ஆய்வுக்கு பின்னா், சாத்திய கூறுகள் இருப்பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மண்டல... மேலும் பார்க்க