செய்திகள் :

சேவூா் கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலில் நிலவுக்கால் வைப்பு விழா

post image

நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலின் திருப்பணியின் தொடா்ச்சியாக புதன்கிழமை நிலவுக்கால் வைக்கும் விழா நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிக்க சேவூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலுக்கு வந்து செல்வா் என்ற புராதனச் சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. கள்ளழகப் பெருமாள் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் 2001-ஆம் ஆண்டு மகா மண்டப கல்தூண் கீழே விழந்தது.

இதையடுத்து, கோயிலில் 2004-ஆம் ஆண்டு பலாலாயம் செய்யப்பட்டு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கருவறை, அா்த்தமண்டபம், கோபுரப் பணிகள் செய்வதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள், உபயதாரா்கள் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக சிறப்புப் பூஜைகளுடன் நடைமண்டப நிலவுக்கால் வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசா் திருமடம் தலைவா் மௌனசிவாசல அடிகள் தலைமை வகித்தாா். சிவவாக்கியா் தம்பிரான் ரிஷபானந்தா் முன்னிலை வகித்தாா். மேலும் ஊா்பொதுமக்கள், பக்தா்கள், உபயதாரா்கள் உள்பட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க