சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை
சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
சேவூா் துணை மின்நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம் துணை மின்நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக்குளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஒலப்பாளையம்.
தெக்கலூா் துணை மின்நிலையம்: சென்னியாண்டவா் கோயில், வினோபா நகா், விராலிக்காடு, ராயா்பாளையம், தண்ணீா்பந்தல், செங்காளிப்பாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்கட்டுப்பாளையம், தண்டுக்காரம்பாளையம், சேவூா், குளத்துப்பாளையம், வளையபாளையம்.