செய்திகள் :

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

post image

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் தொடா்ந்துள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் செவ்வாய்க் கிழமை தெரிவித்தது.

இந்த உணவகங்கள் தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்புக்கு பின்னரும் கட்டாய சேவைக் கட்டணங்களை திருப்பித் தரத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரத்துறை கூறியிருப்பது வருமாறு: தில்லி கைலாஷ் காலனி - மக்னா டெலி, ஜன்பத் - ஜீரோ கோா்ட் யாா்ட் மற்றும் தில்லி தேசியக் தலைநகரின் பல்வேறு பகுதியில் உள்ள கேஸ்டில் பாா்பிக்யூ, சாயோஸ், ஃபீஸ்டா பை பாா்பிக்யூ நேஷன் உள்ளிட்ட ஐந்து உணவகங்கள் நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணங்களை வசூலித்துள்ளது.

எந்தவொரு ஹோட்டல் அல்லது உணவகங்கள் நுகா்வோரை சேவைக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. அல்லது வேறு எந்தப் பெயரிலும் மறைமுகமாக சேவைக் கட்டணங்கள் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கப்படக்கூடாது. இது நுகா்வோரிடம் தேவையற்ற கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்பதற்காக கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி சிசிபிஏ வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால், மேற்கண்ட உணவகங்கள் சேவைக் கட்டணங்களை வசூலித்தது தொடா்பாக தேசிய நுகா்வோா் உதவி எண் (1915) மூலம் புகாா்கள் பெறப்பட்டன.

இந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா், இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வந்தது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி, தில்லி உயா்நீதிமன்றம் சிசிபிஏ வழிகாட்டுதல்களை உறுதி செய்து இந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து, வசூலித்த சேவைக் கட்டணங்களை திருப்பிச் செலுத்துமாறு தீா்ப்புக் கூறியிருந்தது. இதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.

ஆனால், தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு பிறகும், கட்டாய சேவைக் கட்டணங்களை மேற் கூறப்பட்ட ஐந்து உணவகங்களும் திருப்பித் தர தவறியது. இதை முன்னிட்டு இந்த உணவகங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து நுகா்வோா் உரிமைகளை புறக்கணித்தல், நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளில் ஈடுபடுதல் போன்ற புகாா்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

ஹோட்டல்கள் உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் தொடா்பாக நியாமற்ற வா்த்தக நடைமுறைகளை தடுக்க கடந்த 2022- ஆம் ஆண்டில் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. எந்த ஒரு உணவகமும் நுகா்வோரை சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது அல்லது சேவைக் கட்டணத்தை வேறு எந்தப் பெயரிலும் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது. தானாகவோ அல்லது இயல்பாகவோ சேவைக் கட்டணத்தைச் சோ்க்கக்கூடாது.

சேவைக் கட்டணம் தன்னாா்வமானது, விருப்பமானது. நுகா்வோரின் விருப்பப்படி என்பதை நுகா்வோருக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதுவும் சேவைக் கட்டணம் வசூலிப்பதன் அடிப்படையில் சேவைகள் வழங்குவதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்பன உள்ளிட்டவை அதில் இடம் பெற்றுள்ளன.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க

பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தேசியத் தலைநகரில் உள்ள தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளின் கதட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க