செய்திகள் :

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

post image

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்க சைபர் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், குற்றங்களும் அதனால் இழப்புகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில், சைபர் குற்றங்கள் குறித்து தில்லியில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டில் மட்டும் சைபர் மற்றும் மோசடி குற்றங்களால் ரூ. 22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இது 2023-ல் நிகழ்த்தப்பட்ட ரூ. 7,465 கோடியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்; 2022-ல் ரூ. 2,306 கோடியைவிட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் ரூ. 1.2 லட்சம் கோடிக்குமேல் இந்தியர்கள் இழப்பர் என்றும் கணித்துள்ளனர்.

2023-ல் சுமார் 15.6 லட்சமாக இருந்த சைபர் குற்றம் தொடர்பான புகார்கள், 2024-ல் 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

2024, ஜனவரி மாதத்தில் மட்டும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் தளங்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சைபர் புகார்களின் எண்ணிக்கை 15,000. அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரியில் 14,000 மற்றும் மார்ச்சில் 15,000 புகார்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

Digital Fraud, Cybercriminals Stole Rs 23,000 Crore From Indians In 2024

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கி... மேலும் பார்க்க

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

உத்தர பிரதேசத்தில் கால்வாயில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.இதுதொடா்பாக மாநில காவல் துறையினா் கூறியதாவது: சிஹாகான் கிராமத்தைச் சோ்ந்த 15 போ் கருகுபூரில் ... மேலும் பார்க்க

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும்: ரயில்வே அமைச்சா்

‘மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதபாத் வரை நாட்டின் முதல் அதிவேக (புல்லட்) ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க