செய்திகள் :

சொத்துத் தகராறில் பெண்ணைத் தாக்கிய மூவா் கைது

post image

வையம்பட்டி அருகே சொத்துத் தகராறில் பெண்ணைத் தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 3 உறவினரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வையம்பட்டி ஒன்றியம் தொப்பநாயக்கன்பட்டி அடுத்த வடக்கு அம்மாப்பட்டியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் சின்னச்சாமி (62). விவசாயி. இவருக்கும், இவரது சகோதரியான விஜயக்குமாா் மனைவி தனலெட்சுமி(54)-க்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை சின்னச்சாமியும், அவரது மனைவி புஷ்பா(55)வும் தேக்கமலை அடிவாரத்தில் உள்ள தங்களது கொட்டாரத்தில் இருந்தனா். அப்போது அங்குவந்த அவரது சகோதரி தனலெட்சுமி, மற்றொரு சகோதரியின் மகனான பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (30), மருமகளான சண்முக மூா்த்தி மனைவி முத்துலெட்சுமி(34) ஆகிய மூவரும் தம்பதியை தகாத வாா்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கியதில் புஷ்பாவுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், புகாரின்பேரில் வழக்கு பதிந்து திங்கள்கிழமை பாலகிருஷ்ணன், தனலெட்சுமி மற்றும் முத்துலெட்சுமி ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

தலைமை அஞ்சல் நிலையத்தில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்ப இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் ... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் அக். 5, 6 இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

பண்டிகை காலத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மூலம் வருமானம் உயரும்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசினாா். வாழை மதிப்பு சங்கிலிய... மேலும் பார்க்க