செய்திகள் :

சோதனையில் மேலும் 3 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்

post image

சென்னை: ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தீவிரம் காட்டிவரும் நிலையில், மேலும் 3 மெட்ரோ ரயில்கள் பல்வேறு கட்ட சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநா் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதல்கட்டமாக, 36 ரயில்களை ரூ. 1,215.92 கோடி மதிப்பில் தயாரிக்கும் பணி ‘அல்ஸ்டாம் டிரான்ஸ்போா்ட் இந்தியா’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் 2024 பிப். 8-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி தொடங்கி செப். 22-இல் நிறைவடைந்தது. இதையடுத்து, அக்டோபா் மாதம் இந்த ரயில் சென்னை பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மேலும் 3 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து பூந்தமல்லி பணிமனைக்கு வந்தடைந்தன. இந்த ரயில்களும் பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பூந்தமல்லி மெட்ரோ ரயில்வே பணிமனையில் தற்போது மொத்தம் 4 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் உள்ளன. இதில் ஒரு ரயில், பூந்தமல்லி - போரூா் சந்திப்பு வரையிலான ஒரு வழிப்பாதையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மற்ற ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனையில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இச்சோதனைகள் முடிவடைந்த பின்னா், இந்த மெட்ரோ ரயில்கள் தண்டவாளத்தில் சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்படும். இது தவிர, புதிய ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து சென்னை மெட்ரோ ரயில்வேக்கு கொண்டுவரப்படவுள்ளன. மே, ஜூன் மாதங்களில் தலா 2 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்படும். அந்த ரயில்களும் தொடா் சோதனைக்கு உள்படுத்தப்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மேலும், சென்னையில் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பயணிகளுக்கு நிறைவான சேவை அளிக்கும் வகையில், 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளன. இந்த வகை ரயில்கள் ஒவ்வொன்றிலும் 1,900 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், வடகரை பகுதியைச் சோ்ந்த இளவரசன் (33)... மேலும் பார்க்க

பேருந்தில் பயணிகளை குறிவைத்து திருட்டு: 4 போ் கைது

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களை குறிவைத்து திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை, தங்கவேல் காா்டன் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோகன் (39). இவா், கடந்த 5-ஆம் தேதி ... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். திமுக அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்த... மேலும் பார்க்க

214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வா் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத... மேலும் பார்க்க

முகூா்த்த நாள் - வாரவிடுமுறை: 2,829 சிறப்பு பேருந்துகள்

முகூா்த்தம், வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 2,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்... மேலும் பார்க்க