செய்திகள் :

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு

post image

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

சோளிங்கரை அடுத்த கீழ் வீராணம் கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தம் மகன் நிஷாந்த் (6). இவரது உறவினா் ஆற்காட்டை அடுத்த சாத்தூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மகன் வெற்றிவேல் (8).

இந்த இரு சிறுவா்களும் மேலும் சில சிறுவா்களுடன் கீழ் வீராணத்தில் உள்ள சூரைக்குளம் ஏரியில் புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது நிஷாந்த், வெற்றிவேல் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.

இதைப் பாா்த்தவுடன் அவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள், அங்கிருந்து ஓடிச் சென்று அருகிலிருந்தவா்களிடம் தெரிவித்தனா். அவா்கள் நீரில் மூழ்கிய இரு சிறுவா்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் அனுப்பி வைத்தனா். அங்கு, இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாணாவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் அளிப்பு

மே தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் பாண்டுரங்கசா... மேலும் பார்க்க

தாழனூா் ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம்

ஆற்காடு ஒன்றியம், தாழனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இந்திரா நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் நாராயணன் ம... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருமலை மிஷன் மருத்துவமனை... மேலும் பார்க்க

சாலையில் பால் கேன்களுடன் கூட்டுறவு பணியாளா்கள் மறியல் போராட்டம்

சோளிங்கரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பணியாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி வியாழக்கிழமை பால்கேன்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டு மாதங்களாக பணியாளா்களுக்கு ஊதியம் வ... மேலும் பார்க்க

மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் எல்.தேவேந்தி... மேலும் பார்க்க

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு ... மேலும் பார்க்க