செய்திகள் :

ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!

post image

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் ராஜிநாமா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று காலை தொடங்கியது. மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.

இந்த செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜகதீப் தன்கரின் ராஜிநாமா குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

“ராஜிநாமாவுக்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். இதைப் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. மத்திய அரசு அல்லது அவருக்குத் தெரியும். அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் அரசிடம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

திமுக மூத்த எம்பி டி. ஆர். பாலு, அழுத்தம் காரணமாக தன்கர் ராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கெளரவ் கோகோய் கூறியதாவது:

”மத்திய அரசுக்கு குடியரசு துணைத் தலைவருக்கும் இடையேயான உறவு முன்பு போல் இல்லை எனத் தெரிகிறது. ஏனென்றால், நேற்று தன்கர் நடத்திய கூட்டத்தில் ஒரு அமைச்சர்கூட இல்லை.

குடியரசுத் துணைத் தலைவர் தனது உடல்நிலை காரணமாக ராஜிநாமா செய்யவுள்ளது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்ததா? இல்லையெனில், ஏன் இதுபோன்ற குழப்பம்? நாங்கள் இதனை அறிய விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்,

சமாஜவாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் கூறியதாவது:

“நேற்றைய கூட்டத்தில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை போன்று தெரியவில்லை. இந்த செய்தியை அறிந்ததும் நேற்றிரவு அதிர்ச்சி அடைந்தேன்.

அவர் தனது உடல்நிலையை மேற்கோள் காட்டி ராஜிநாமா செய்திருப்பதால் எதுவும் சொல்ல முடியாது. அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகௌம் இருக்க பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Opposition leaders have expressed their views on the resignation of Vice President Jagdeep Dhankhar.

இதையும் படிக்க : ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்

ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்க... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க