செய்திகள் :

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மங்களூருவைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் ஒன்றிய பொறுப்பு வகித்து வந்த இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அந்தப் பகுதிகளில் நடந்து வந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி இவர் 407 மினி லாரி ஏற்றி கொலைசெய்யப்பட்டார்.

ஜகபர் அலி

கொலைசெய்யப்பட்ட ஜகபர் அலியின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் ஆர்.ஆர் குரூப்ஸ் குவாரியின் உரிமையாளர்கள், ராசு, ராமையா ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் உள்ளிட்ட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சரியாக விசாரிக்காத திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு, இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து பேரையும் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மறுபடியும் குற்றவாளிகள் ஐந்து பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.

ஆய்வு

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரின் வீடுகளில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர். சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் எ... மேலும் பார்க்க

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் ம... மேலும் பார்க்க

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.அப்படித்தான் கூகுள... மேலும் பார்க்க