செய்திகள் :

ஜப்பானை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

post image

இந்தியாதான் சிறந்த நிதி மேலாளராகத் திகழ்வதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மைகளுக்கிடையே, இந்தியாவைத்தான் ஒரு நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய சந்தையாக முதலீட்டாளர்கள் கூறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், ஆசியாவிலேயே நிதி மேலாண்மையில் (Fund Managers) இந்தியாதான் அதிகளவில் தேர்வு செய்யப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது. சிறந்த நிதி மேலாளராகக் காணும்போது, ஜப்பான் நாட்டைவிடவும் இந்தியா விஞ்சிவிட்டதாக போஃபா செக்யூரிட்டீஸ் (BofA Securities) ஆய்வு கூறுகிறது.

மேலும், இந்தியாவுக்கு 42 சதவிகிதம் ஆதரவு கிடைக்கப் பெற்றது. ஜப்பானுக்கு 39 சதவிகிதத்தினரும், சீனா வெறும் 6 சதவிகிதம் மட்டுமே பெற்றது. சுமார் 234 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கும் நிதி மேலாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

வரி மற்றும் வர்த்தகப் பதற்றக் காலங்களிலும் ஏற்படும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மறுசீரமைப்புகளிலிருந்து இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால்தான், இந்தியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஏப்ரல் 2 ஆம் தேதிமுதல், மற்ற ஆசிய நாடுகளைவிடவும் இந்திய பங்குச்சந்தை சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றத்தின்போது, தற்காலிக வீழ்ச்சியைக் கண்டாலும், திடமான செயல்திறனைக் கொண்டுள்ளது.

சிறந்த பணப்புழக்கம், வரி, கிராமப்புறங்களின் தேவை ஆகியவற்றின் மூலம் இந்தாண்டு இறுதிக்குள், இந்திய நிறுவனங்களின் லாபத்தில் மேலும் 7.6 சதவிகிதம் வளர்ச்சியடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! - கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில்... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க