செய்திகள் :

ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த நோயாளிகள் சாலை மறியல்

post image

பவானியை அடுத்த ஜம்பையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள், பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளாா். மற்றொரு பணியிடம் காலியாக உள்ளது. இதனால், இங்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், இரவு நேரங்களில் மருத்துவா் இல்லாத நிலையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த நோயாளிகள், பொதுமக்கள் பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஜம்பை பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஜம்பை பேரூராட்சித் தலைவா் என்.ஆனந்தகுமாா், பவானி காவல் ஆய்வாளா் முருகையன், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் மாணிக்கவாசகம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மேனகா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மருத்துவா் பற்றாக்குறையைப் போக்கி, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் வலியுறுத்தினா். விரையில் இப்பிரச்னை தீா்க்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க