செய்திகள் :

``ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா, வளர்ச்சி முக்கியமானது.." - பஹல்காமில் உமர் அப்துல்லா பேசியதென்ன?

post image

'பஹல்காம்' என்ற வார்த்தையை அவ்வளவாகக் கேட்டிராத இந்தியா மற்றும் உலக நாடுகள், கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு, அந்தப் பெயரை அடிக்கடி உச்சரித்து வருகின்றன.

ஆம்... பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், இந்தப் பெயர் உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

இன்று மீண்டும் அந்தப் பெயர் இந்தியாவில் அடிப்படுகிறது. காரணம், ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பஹல்காமில் சட்டமன்றக் கூட்டத்தை நேற்று நடத்தி முடித்துள்ளார்.

உமர் அப்துல்லா

இதுகுறித்து உமர் அப்துல்லா நேற்று கூறுகையில், "ஜம்மு & காஷ்மீரின் அமைச்சரவைக் கூட்டம் காலை பஹல்காமில் நடைபெற்றது. ஜம்மு அல்லது ஶ்ரீநகரைத் தாண்டி வேறொரு பகுதியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை.

எங்களது அரசுக்கு என தெளிவான நிலைப்பாடு உள்ளது. ஆனால், வெறும் நிர்வாக மற்றும் அரசாங்கச் செயல்பாடுகளுக்காக மட்டும் நாங்கள் பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவில்லை.

ஜம்மு & காஷ்மீரின் வளர்ச்சி, சந்தோஷம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற எங்களது நிலைப்பாடுகளை எந்தத் தாக்குதல்களும் நிறுத்தாது.

இந்தக் கூட்டத்தின் மூலம், நாங்கள் காஷ்மீர் மக்கள் முக்கியமாக பஹல்காம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஏப்ரல் 22-ம் தேதி சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் துணிவாக நின்றதற்கும், தாக்குதலுக்கும், வன்முறைக்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

அடுத்து எடுத்து வைக்கும் அடிகளை கவனமாக எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் காஷ்மீரில் சுற்றுலா தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 5 - 6 வாரங்கள், நாட்டிற்கு கடினமான காலம்.

ஜம்மு & காஷ்மீர் அதிக விலையைக் கொடுத்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர, என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். நமக்கு வேண்டிய உதவியை மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

நாம் பஹல்காமில் இருக்கிறோம். சுற்றுலா நமக்கு மிக முக்கியமானது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலா ஆபரேட்டர்கள் குழு தற்போது பஹல்காமி உள்ளனர். இவர்கள் ஶ்ரீநகருக்கும் வருவார்கள்.

இப்போது இந்தக் குழுவில் 20 - 25 பேர் இருக்கிறார்கள். அடுத்ததாக இருந்து கிட்டத்தட்ட 60 சுற்றுலா ஆபரேட்டர்கள் வந்து இங்கு சுற்றுலாத் துறையை மீண்டும் தொடர்வது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறார்கள். அவர்களுக்கு நன்றி" என்று பேசியுள்ளார்.

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க