செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர்: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள்!

post image

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த யூனியன் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்களிலும் இந்த கோடை காலத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆள்நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்.. பஹல்காமின் இருளும் ஒளியும்!

ஜம்முவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பட்னீடாப் பகுதியில் பெரும்பாலான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, பட்னீடாப்பிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: “பட்னீடாப் வெறிச்சோடி கிடக்கிறது. பஹல்காமில் நடந்ததைப் போல, பட்னீடாப்பில் இதுவரை அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். எனினும், காவல்துறையும், பாதுகாப்பு படைகளும் இங்கு ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

ஏப்ரல் தொடக்கத்தில் பட்னீடாப்பிலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் 80 சதவீதம் அறைகள் நிரம்பியிருந்தன. ஆனால், இப்போது இங்கு யாருமே இல்லாத நிலை உள்ளது. ஒட்டுமொத்த பட்னீடாப்பும் காலியாக இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்நேரத்தில் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். பட்னீடாப் முழுக்க முழுக்க பாதுகாப்பானதொரு பகுதியாகும். ஆகவே, யாரும் பயப்பட வேண்டாம். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இப்பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனர்” என்றார்.

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்! - மத்திய அமைச்சா் புரி உறுதி

‘நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) முழுமையாகத் தோற்கடிக்கப்படும்; அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது’ என்று மத்திய பெ... மேலும் பார்க்க