செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் பதுங்குமிடம் தகர்ப்பு! ஆயுதங்கள் பறிமுதல்!

post image

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்று, பாதுகாப்புப் படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோடே வனப்பகுதியில், அம்மாநில காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (ஜூலை 5) ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பயங்கராவதிகளின் பதுங்குமிடம் ஒன்று இருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து தகர்த்துள்ளனர். இருப்பினும், இந்தச் சோதனையின்போது யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பதுங்கு குழியில் இருந்து 3 கையெறி குண்டுகள், ஏகே ரக துப்பாக்கியின் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ வனப்பகுதியில், பயங்கராவதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை 4-வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

A terrorist hideout has been busted by security forces in Poonch district of Jammu and Kashmir.

இதையும் படிக்க: ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க