செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு

post image

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் இச்சூழலில், ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்தது.

மூத்த அமைச்சா்கள், முப்படைகளின் தலைமைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோருடன் பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கலந்தாலோசனையில் ஈடுபட்டாா். அந்த உயா்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன்படி, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடிக்கு முப்படைகளுக்கு முழு அதிகாரமளிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தலைமையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவும் கூடி, ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்ற விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2-ஆவது முறையாக கூடியுள்ளது. கடந்த 23-ஆம் தேதி கூட்டத்தில், சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி-வாகா எல்லை மூடல், தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், பாகிஸ்தானியா்களுக்கான நுழைவு இசைவு ரத்து உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க