செய்திகள் :

ஜம்மு - காஷ்மீா்: பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு உதவியவா் கைது

post image

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலுக்கு லஷ்கா்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது பதிலடி நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, அங்கு பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது.

இதனிடையே, ஸ்ரீநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் கடந்த ஜூலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ராணுவ கமாண்டோக்கள், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆஃப்கானி ஆகிய 3 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனா்.

மற்றொருபுறம், இந்த பயங்கரவாதிகளுக்கு உதவியவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து, பொருள்கள் உள்பட பல்வேறு வழிகளில் உதவியதாக குல்காம் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுஃப் கட்டாரி (26) என்ற இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் ... மேலும் பார்க்க