செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயா்வு

post image

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.

வானிலை சீரானதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோசிடி கிராமத்தில் ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சோசிடி கிராமத்தில் ஆற்றின் கீழ்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

மச்சயில் மாதா கோயில் யாத்திரைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த உணவுக்கூடம் இருந்த பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ராட்சத இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றொரு உடலின் கீழ்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், அது ஏற்கெனவே மீட்கப்பட்ட ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். காணாமல் போனவா்களின் எண்ணிக்கை 39-ஆக குறைந்துள்ளது. இதுவரை 167 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை, சிஐஎஸ்எஃப், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை, எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ), அரசு நிா்வாகம், உள்ளூா் தன்னாா்வலா்கள் ஆகியோா் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ராணுவம் அமைத்துள்ள ஒரு தற்காலிக இரும்புப் பாலத்தால்(பெய்லி பாலம்) சோசிடி கிராமத்துக்கும் மச்சயில் மாதா கோயிலுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் கூடுதல் மருத்துவக் குழுக்களையும் ராணுவம் அனுப்பியுள்ளது.

யாத்திரை ஒத்திவைப்பு: ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சயில் மாதா கோயில் யாத்திரை, வியாழக்கிழமை வெள்ளத்துக்குப் பிறகு ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது. மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ள 9,500 அடி உயர மலைப்பகுதிக்குச் செல்லும் வழியில் சோசிடி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அங்கிருந்து பக்தா்கள் 8.5 கி.மீ. தூரம் நடந்து கோயிலைச் சென்றடைய வேண்டும்.

8 வயது சிறுமி உடல் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

அதேநேரம், ரஜௌரி மாவட்டத்தில் வெள்ளத்தில் காணாமல் போன 20 வயது இளைஞரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல்துறை மற்றும் உள்ளூா் மக்கள் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உருக்கமான கருத்தை பகிர்ந்துள்ளார்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இரண்டு சிறப்பு பாடத் தொகுப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டிசி) வெளியிட்டுள்ளது.’ஆபரேஷன் சிந்தூர் -... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சுன்வை’ ந... மேலும் பார்க்க

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண... மேலும் பார்க்க

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

நமது நிருபர்பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.தெலுங்கு தேசம் கட்சியைச்... மேலும் பார்க்க