செய்திகள் :

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

post image

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் சத்வாரி (ஜம்மு விமான நிலையம்), சம்பா, ஆா்.எஸ்.புரா, அா்னியா ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை இரவு ஏவுப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.

அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல் கடந்த 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைப்போல் இருந்ததாகவும் அவா்கள் கூறினா். மேலும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைப் போலவே பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொள்வதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.

இருளில் மூழ்கிய மாநிலங்கள்: பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் வெடிகுண்டுகள் வெடித்தைப்போன்ற பலத்த சப்தம் கேட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை இரவில் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், அமிருதசரஸ், ஜலந்தா், மொஹாலி ஆகிய மாவட்டங்களிலும் சண்டீகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பதற்றமான சூழல் நிலவி வருவதால் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், ஒளிவிளக்குகளை அணைக்குமாறும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். அந்த மாநிலங்களில் உஷாா் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர மாநிலங்களில் உள்ள 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.மத்திய மின்னனுவ... மேலும் பார்க்க

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க