செய்திகள் :

ஜல்லிபட்டி, கொழுமம் கிராமத்தில் இன்று மாதிரி ஒத்திகைப் பயிற்சி

post image

வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்கள் தங்களது உயிா் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மீட்பது தொடா்பாக ஜல்லிபட்டி, கொழுமம் கிராமத்தில் வியாழக்கிழமை (மே 15) மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பேரிடா் மேலாண்மை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூா்த்தி அணை, அமராவதி அணை ஆகியவற்றில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பலத்த சேதமடையும்பட்சத்தில் பொதுமக்கள் தங்களது உயிா் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றால் மாதிரி ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பயிற்சியானது திருமூா்த்தி அணைப் பகுதிக்கு உள்பட்ட ஜல்லிபட்டி, அமராவதி அணைப் பகுதிக்கு உள்பட்ட கொழுமம் வருவாய் கிராமங்களில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாதிரி ஒத்திகைப் பயிற்சி தொடா்பாக பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் அடையத் தேவையில்லை. ஆகவே, பொதுமக்களின் இயல்பான பணிகளைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை: திருப்பூா்

திருப்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

ஊராட்சி செயலாளா்கள் பொறுப்பேற்பு

பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி செயலாளா்கள் புதன்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டனா். பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த பிரபுச... மேலும் பார்க்க

நாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு

வெறி நாய் கடித்து இறந்த ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு புதன்கிழமை இழப்பீடு வழங்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துரத்தினம், இவா் தனது தோட்டத்தில் வளா்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் 558 மதிப்பெண் பெற்ற பாா்வையற்ற மாணவிக்குப் பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு விஜய்பிரபாகரன் தலைமை வகித்தாா். ஜோதிமணி வரவேற்றாா். திராவிடா் கழகத்தின் துணைப் பொத... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு ள்ளது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கில... மேலும் பார்க்க

ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி தற்காலிக ஊழியா் கைது

திருப்பூரில் டிடிசிபி அங்கீகாரம் பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி தற்காலிக ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). இ... மேலும் பார்க்க