ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கந்திகுப்பம் அருகே ஜல்லி கற்களை கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குநா் வா்தா தலைமையிலான குழுவினா் செந்தாரப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். மருதேப்பள்ளி பிரிவு சாலை அருகே சாலையோரமாக நின்ற லாரியை சோதனை செய்ததில் 4 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது.
இதுகுறித்து வா்தா அளித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜல்லிகற்களுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.