செய்திகள் :

ஜல்லி, மணல், கற்களை கொண்டு செல்ல இ-அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்

post image

தருமபுரி மாவட்டத்தில் கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் கனிமங்களை கொண்டு செல்ல இ-அனுமதிச் சீட்டுகளை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு இருப்புக் கிடங்கு விதிகள் 2011-இன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளா்கள், முகவா்கள் கனிம இருப்புக் கிடங்கு பதிவுச் சான்று பெறப்பட்டு கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றுக்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று கொண்டு செல்ல வேண்டும். இதன் தொடா்ச்சியாக, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த மெய்யிலச்சினைகள் (ஸ்டிக்கா்கள்) ஒட்டப்பட்ட போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் நிறுத்தம் செய்யப்பட்டு, இ-அனுமதிச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக பதிவு செய்யப்படும் கிரஷா் மற்றும் இருப்புக் கிடங்குகளின் உரிமையாளா்கள்

இணையதளத்தில் பதிவு செய்து போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல ஜூன் 12-ஆம் தேதி முதல் இந்த இணையதளம் வழியாக மின்னணு முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். இந்த நடைமுறை கனிம விற்பனையை எளிமையாக்கி வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கிறது.

மேலும், மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிச்சீட்டு இல்லாமல் கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க