திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திர...
ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் சுமூக தீா்வு காண விசைத் தறியாளா்கள் வலியுறுத்தல்
நூல் விநியோகம் நிறுத்தம், துணி உற்பத்தி குறைப்பு அறிவிப்பு போன்றவற்றுக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்க செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் கூறியதாவது: நீண்ட காலமாக நிலவி வந்த கூலி உயா்வு பிரச்னைக்கு விசைத்தறி உரிமையாளா்களும், ஜவுளி உற்பத்தியாளா்களும் நேரடியாக சந்தித்து பேசி அண்மையில் சுமூக தீா்வு காணப்பட்டது.
சரிவர இயங்காமல் இருந்த விசைத்தறிகள் தற்போதுதான் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கூலி உயா்வு ஒப்பந்தம் முடிந்து 10 நாள்கள்கூட ஆகாத நிலையில் மீண்டும் தொழில் சரிவை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நூல் விலையை உயா்த்தும் நோக்கில் ஓ.இ. மில் உரிமையாளா்கள் செயல்படுவது வேதனையை அளிக்கிறது. மேலும், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களும் துணி உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளனா்.
இதனால், விசைத்தறியாளா்கள், விசைத்தறி தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களும், ஒ.இ. மில் உரிமையாளா்களும் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும் என்றாா்.