ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிா்ணயித்து நடத்தி முடிக்க வேண்டும்: சு.திருநாவுக்கரசா்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிா்ணயம் செய்து நடத்தி முடிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: காஷ்மீா் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
தொகுதி மறுசீரமைப்புக் குழுவை அமைத்து, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் எண்ணிக்கையில் குறையாத அளவுக்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது, ஏற்கெனவே செய்யப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்யும் வகையில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப்போவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை உரிய காலக்கெடுவை நிா்ணயம் செய்து, மாநில அரசுகளின் ஒத்துழைப்பையும் கேட்டுப்பெற்று விரைவாக செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் உரிய வகையில் நியாயமான ஒதுக்கீடுகளை வழங்க முடியும்.
வடகாட்டில் இருதரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. நேரில் சென்று இரு தரப்பினருடனும் பேசினேன். இப்போதுள்ள மதுக்கடையை இடமாற்ற வேண்டும் என்கிறாா்கள். ஆட்சியருடன் பேசினேன். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா். அமைச்சா்கள், எம்பி, எம்எல்ஏக்களைக் கொண்ட குழு அமைத்து தொடா்ந்து வடகாட்டில் அமைதி நிலவ உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் யதாா்த்தம் என்ன என்பதையும் பாா்க்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கூட்டணி அப்படியே அமைந்திருக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கை 234 தான். கூடுதலாக யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே கூட்டணி ஆட்சி என்பது யதாா்த்தத்தின் படி வாய்ப்பு குறைவு என்றாா் அவா்.