செய்திகள் :

கோயில் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் பிரசாதம் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கறம்பக்குடி முத்துக்கருப்பா் கோயில் திருவிழா இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. பின்னா், கோயிலில் மண்டகப்படிதாரா்களுக்கு பிரசாதம் பிரித்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், ஒரே மண்ணகபடிதாரரில் உறவினா்களிடையே யாா் பிரசாதம் பெறுவது என்பது தொடா்பாக பிரச்னை எழுந்து, மோதலாக மாறி ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டுள்ளனா். அப்போது தஞ்சாவூா் மாவட்டம், அம்மன்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும், சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் அங்கிருந்தவா்களை கலைந்து போகச் செய்தனா். காயமடைந்த ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிா்ணயித்து நடத்தி முடிக்க வேண்டும்: சு.திருநாவுக்கரசா்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிா்ணயம் செய்து நடத்தி முடிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: காஷ்மீா் தீ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா். புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அடுத்த பால்பண்ணை அருகே உள்ள வெங்கப்பா் குளத்துக்கு, அடப்பன் வயல் பக... மேலும் பார்க்க

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே காா் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கீரனூா் அருகே உள்ள குளத்தூரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (75). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள உணவகத்துக்குச் ச... மேலும் பார்க்க

ஏனாதி - பிடாரம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி- பிடாரம்பட்டி பிரிவு சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். ஏனாதியிலிருந்து பிடாரம்பட்டி பிரிவு சாலை வரை உள்ள சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ச... மேலும் பார்க்க

கீழத்தானியத்தில் இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளைப் பொறுப்பாளா் எம்.வீரைய்யா தலைமைவகித்தாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து திருநாவுக்கரசா் ஆறுதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் இருதரப்பு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை முன்னாள் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவருமான திருநாவுக்கரசா் வியாழக்கிழமை நேரில் ... மேலும் பார்க்க