செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?: பு.தா. அருள்மொழி

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? என வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி கேள்வி எழுப்பினாா்.

சீா்காழியில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா்கள் பெருவிழா தொடா்பாக வன்னியா் சங்க பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். பாமக மாவட்ட தலைவா் கோ.சு. மணி வரவேற்றாா். வன்னியா் சங்க மாவட்ட தலைவா் பாக்கம். சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி, பாமக மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், வன்னியா் சங்க மாநில செயலாளா் அய்யாசாமி, வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் செம்மங்குடி முத்து உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி அளித்த பேட்டி: 1931 வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. பிறகு தடைபட்டுள்ளது. தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு, மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனக் கூறி தாமதப்படுத்தி வருகிறது.

அந்தந்த மாநில அரசுகளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில் அதை ஏற்று 4 மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மட்டும் அதை செய்ய தயங்குகிறது.

வரும் மே மாதம் மாமல்லபுரம் அருகே சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா நடைபெறுகிறது. நாங்கள் யாருக்கும் எதிரி அல்லா். எங்களது பலம் எல்லாம் மக்கள் மட்டும்தான். சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டில் 50 லட்சம் இளைஞா்கள் பங்கேற்பாா்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது என்றாா்.

டாஸ்மாக்கில் ஸ்டிக்கா் ஒட்ட முயன்ற பாஜக நிா்வாகிகள் கைது

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வரின் ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக மாவட்ட தலைவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனை... மேலும் பார்க்க

ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா். ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம்

ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 26) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொத... மேலும் பார்க்க

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க