திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது: சித்தராமையா
ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பிகாா், தெலங்கானா, கா்நாடக மாநிலங்களில் ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்லாது, சமூக, கல்வி, பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அறிக்கை, 2024-ஆம் ஆண்டு கா்நாடக அரசிடம் பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் அளித்தது.
இந்நிலையில், பாகல்கோட்டில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
சமூக பொருளாதார கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமா அல்லது சமூக பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை. மத்திய அரசு அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்துகொண்டு கருத்து தெரிவிக்கிறேன்.
சமூகநீதிக்கு சமூக பொருளாதார கணக்கெடுப்பு அவசியமானது. மக்கள்தொகை மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட வேண்டுமென்றால், ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சமூக பொருளாதார கணக்கெடுப்பும் நடத்த வேண்டும்.
கா்நாடக அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரின் கருத்தை கேட்டிருக்கிறேன். அவா்களின் கருத்து கிடைத்தவுடன் அது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றாா்.