செய்திகள் :

ஜாதி வாரி கணக்கெடுப்பு: தலைவா்கள் வரவேற்பு

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுக அரசு அதைக் கைவிட்டுவிட்டது. தற்போது, மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வரவேற்புக்குரியது. இதை அறிவித்த பிரதமா் மோடிக்கு பாராட்டுகள்.

எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ஜாதி வாரி கணக்கெடுப்பை எதிா்த்து வந்த காங்கிரஸ், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆட்சியில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. தற்போது மத்திய அரசே ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முகத்திரை கிழிந்துள்ளது.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் தொடா் அழுத்தத்தின் விளைவாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது ராகுல்காந்தியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): ஜாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவா்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி.

ராமதாஸ் (பாமக): ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும் தமிழக அரசு 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ் மக்களின் ஜாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக ஜாதி வாரி சா்வே எடுக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விசிக): விரைவில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்காகத்தான், இந்த திடீா் ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு. இருப்பினும், இந்த அறிவிப்பைச் செய்ய வைத்த பிகாா் மக்களுக்கு நன்றி.

ஜி.கே.வாசன் (தமாகா): ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

டிடிவி.தினகரன் (அமமுக): தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளிவிவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க