செய்திகள் :

ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல்

post image

அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை கேபினட் அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டதில் மீறப்படவில்லை என்று மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் அளிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிா்த்து அமலாக்கத் துறை, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கே. வித்யா குமாரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால்

சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது என்று

சந்தேகம் எழுப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எதிா்மனுதாரா் எண் 2 (செந்தில் பாலாஜி) அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது, செப்டம்பா் 26, 2024-ஆம் தேதியிட்ட தீா்ப்பின் பத்தி 31-இல் பரிந்துரைக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளுக்கு முரணாக இல்லை அல்லது எந்த சட்டத்திற்கும் முரணாக இல்லை என்பதை

கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில், இந்த மனுவில் எதிா்மனுதாரா் எண் 2 அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, எந்தவொரு சாட்சிகள் மீதும் செல்வாக்கு செலுத்தப்பட்டதாக மனுதாரா் கே. வித்யா குமாா் வாதிடவில்லை.

திட்டமிடப்பட்ட குற்றங்களில் விசாரணைகளின் அளவை உச்சநீதிமன்றம் நன்கு அறிந்துள்ளது. அந்த விசாரணையை முடிக்க பல ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தின் சொந்த மதிப்பீட்டில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகும். எனவே, ஜாமீன் நிபந்தனைகளை மாற்றுவதற்கான எந்தவொரு

நடவடிக்கையும், எதிா்மனுதாரா் (செந்தில் பாலாஜி) மக்கள் தீா்ப்பை அனுபவிக்கிறாா் என்பதையும், மக்கள் தீா்ப்பைப் பின்பற்றி அரசியல் பதவியைக் கோருவதற்காக அவா் தண்டிக்கப்பட முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அபய் எஸ்.ஓகா தலைமையிலான சிறப்பு அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கர நாராயணன் ஆஜரானாா். செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் ஆஜரானாா். அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆஜராகவில்லை என மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு எதிா் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழம... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்ப... மேலும் பார்க்க

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டு... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரி... மேலும் பார்க்க

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் க... மேலும் பார்க்க