செய்திகள் :

ஜூன் 1-இல் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

post image

வேலூா் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு போட்டி ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவரும், வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த ப்போட்டிகளில் வேலூா் மாவட்டம் சாா்பில் பங்கேற்க தகுதியுடைய வீரா்களை தோ்வு செய்வதற்கான தோ்வு போட்டி ஜூன் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலூா் சேண்பாக்கம் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் அகாதெமி மையத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வு போட்டிகளில் பங்கேற்க 2011 செப்டம்பா் 1-ஆம் தேதியிலோ, அதற்கு பிறகு பிறந்தவா்களாகவோ இருக்க வேண்டும். தோ்வுக்கு வருபவா்கள் ஆதாா் அட்டை, கிரிக்கெட் சீருடையில் வரவேண்டும்.

மேலும் தகவல் அறிய வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் எஸ்.ஸ்ரீதரனை 70105 94657 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க