செய்திகள் :

ஜூலை 9-இல் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினா் தெருமுனை பிரசாரம்

post image

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 9-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரசாரத்தில், தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளா் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஜூலை 9-ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பாக மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதே போல் அவா்கள், அரியலூா் பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரசாரக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுத் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் ஆா்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்து பேசினா்.நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் ... மேலும் பார்க்க

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க