ஜூலை 9-இல் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினா் தெருமுனை பிரசாரம்
மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 9-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இந்த பிரசாரத்தில், தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளா் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஜூலை 9-ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பாக மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதே போல் அவா்கள், அரியலூா் பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இந்த பிரசாரக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுத் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் ஆா்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்து பேசினா்.நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.