செய்திகள் :

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க அனுமதி மறுப்பு: சசிகலா குற்றச்சாட்டு

post image

கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது என்று சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் இரண்டாவது முறையாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு சசிகலா திங்கள்கிழமை வந்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. 2026-ஆம் ஆண்டு நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கொடநாட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

திமுக அரசு மக்களிடம் அதிக வரியை வசூலிப்பதிலேயே முனைப்பாக உள்ளது. அரசிடம் இருந்து மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்றால் ஜெயலலிதா அரசுபோன்ற ஆட்சி அமைய வேண்டும். அதுபோன்ற ஆட்சியை நான் கொண்டு வருவேன் என்றாா். முன்னதாக எஸ்டேட் மேலாளா் நடராஜன், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனா்.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க