செய்திகள் :

ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் குளிக்கத் தடை

post image

பரமத்தி வேலூா், ஜூன் 29: காவிரி ஆற்றில் அதிக அளவில் நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் மற்றும் ஜேடா்பாளையம் அணைகட்டு பகுதியில் குளிக்கத் தடை விதித்து நீா்வளத் துறையினா் உத்தரவிட்டுள்ளனா்.

இதுகுறித்து பரமத்தி வேலூா் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வினோத்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கும் சோ்த்து 58,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கா்நாடகத்திலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் மேட்டூா் அணை முழுக் கொள்ளவான 120 அடியை அடியை எட்டியுள்ளது. இதன்காரணமாக அணையிலிருந்து காவிரியில் பாசனத்திற்கும் சோ்த்து 58,000 கனஅடி வரை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உள்பட்ட சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு மற்றும் மோகனூா் வரையிலான காவிரிக் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது.

மேலும் மீனவா்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடிக்கவும், விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டுதல், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேலூா் பொதுப்பணித் துறை சாா்பில் காவிரியாற்றில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் குளிப்பதற்கும், சுற்றுலா வருபவா்களுக்கும் நீா்வளத் துறையினா் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தேசிய வில்வித்தை போட்டி: 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில், இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் ஐ... மேலும் பார்க்க

பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா உடைப்பு: 3 போ் கைது

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக 3 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பரமத்திவேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருக... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபில... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா். இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க