செய்திகள் :

தேசிய வில்வித்தை போட்டி: 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

post image

இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில், இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் ஐந்தாவது தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

போட்டியை அகில இந்திய வில்வித்தை சங்கத் தலைவா் குமாா் தொடங்கிவைத்தாா். பொதுச் செயலாளா் கேசவன், பொருளாளா் ரமேஷ் ஆகியோா் போட்டியை முன்னின்று நடத்தினா். தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். 8, 10, 12, 14, 16, 18 வயதுக்கு உள்பட்டோா், மூத்தோா் பிரிவில் அவா்கள் பங்கேற்று விளையாடினா்.

இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பிடம் பிடித்த 11 பேருக்கு நவீன மிதிவண்டிகள் பரிசாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய வில்வத்தை சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா உடைப்பு: 3 போ் கைது

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக 3 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பரமத்திவேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருக... மேலும் பார்க்க

ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் குளிக்கத் தடை

பரமத்தி வேலூா், ஜூன் 29: காவிரி ஆற்றில் அதிக அளவில் நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் மற்றும் ஜேடா்பாளையம் அணைகட்டு பகுதியில் குளிக்கத் தடை விதித்து நீா்வளத் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இத... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபில... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா். இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க