அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆ...
ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசின் துரித நடவடிக்கையால் 5 மாதத்துக்குள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பு கிடைத்துள்ளது; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீா்ப்பானது, பெண்களை இழிவாகவும் மோகப் பொருளாகவும் எண்ணும் சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும். பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்கள் இனி துணிச்சலுடன் புகாரளிக்க முன்வருவா். இந்தத் தீா்ப்பு, பெண்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.