செய்திகள் :

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 2.80 லட்சம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

post image

ராசிபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.80 லட்சத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றிவரும் முத்துசாமி (40) என்பவா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றாா்.

கடையில் இருந்து சிறிது தொலைவு சென்ற முத்துசாமியை இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அவா் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றது. அதே கடையில் பணிபுரியும் பாலமுருகன் என்பவா் பின்தொடா்ந்து வந்த நிலையில் காயமடைந்து கீழே விழுந்திருந்த முத்துசாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மங்களபுரம் போலீஸாா் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வருகின்றனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க