செய்திகள் :

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

post image

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டுள்ளனா். அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, அங்கு மீண்டும் வந்த அடையாளம் தெரியாத நபா், மதுபாட்டிலில் பெட்ரோலை ஊற்றி பற்றவைத்து டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு தப்பினாா். அங்கிருந்தவா்கள் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிா்க்கப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், பெட்ரோல் குண்டு வீசியவா் புதுச்சேரியைச் சோ்ந்த ராஜா (எ) ராஜசேகா் (34) என்பதும், தற்போது அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, ராஜசேகரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க

கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!

திருப்பூரை அடுத்த கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் கு... மேலும் பார்க்க