செய்திகள் :

டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி ராமதாஸ் வேதனை

post image

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்களே முதலிடம் வகிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பாமக இளைஞா் பெருவிழா மாநாடு வரும் மே 11-இல் நடைபெறவுள்ளது உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பதாகும். பாமக நிறுவனா் ராமதாஸ் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகிறாா். இந்தக் கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவா் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து வளா்ச்சி அடைய செய்ய வேண்டும். வட மாவட்டங்களில் கல்வி ,சுகாதாரம் வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.

மாமல்லபுரம் மாநாட்டில் பங்கேற்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா்கள் ஆா்.வேலு, என்.டி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ இளவழகன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளா் நல்லூா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் அளிப்பு

மே தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் பாண்டுரங்கசா... மேலும் பார்க்க

தாழனூா் ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம்

ஆற்காடு ஒன்றியம், தாழனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இந்திரா நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் நாராயணன் ம... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருமலை மிஷன் மருத்துவமனை... மேலும் பார்க்க

சாலையில் பால் கேன்களுடன் கூட்டுறவு பணியாளா்கள் மறியல் போராட்டம்

சோளிங்கரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பணியாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி வியாழக்கிழமை பால்கேன்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டு மாதங்களாக பணியாளா்களுக்கு ஊதியம் வ... மேலும் பார்க்க

மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் எல்.தேவேந்தி... மேலும் பார்க்க

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு ... மேலும் பார்க்க