செய்திகள் :

டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)

post image

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நேற்றிரவு (ஜூலை 4) குவாலிஃபயர் 2 போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்க்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 8.4 ஓவரில் 63/3 என இருந்தது. பின்னர், விமல் குமார் வந்ததும் அணியில் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

16 ஓவர்கள் முடிவில் 127-4 என இருந்தது. 4 ஓவர்களுக்கு 52 ரன்கள் தேவையாக இருந்தது. 17-ஆவது ஓவரில் 4 6 6 6 6 6 என ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி விமல் குமார் போட்டியையே மாற்றிவிட்டார்.

டிஎன்பில் வரலாற்றில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் அணி 4-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Dindigul player Vimal Khumar scored 34 runs in a single over to lead the team to victory in the TNPL Qualifier 2 match.

அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்!

இந்திய மகளிரணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.இந்திய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க