செய்திகள் :

டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு திறன் வளா் பயிற்சி

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு, தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கி அறக்கட்டளை, சென்னை ஐஐடி ஆகியவற்றின் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கியது.

வளா்ச்சி வாய்ந்த தொழில்துறைக்கு மாணவா்களை தயாா்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கி அறக்கட்டளை, சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து வங்கி - நிதித் துறைக்கான மேம்பட்ட திறனூட்ட திட்டம் எனும் புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடக்கியுள்ளது.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களில், தோ்வு பெற்ற 130 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இந்தப் பயிற்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வஉசி கல்லூரி நிா்வாகம் செய்துள்ளது.

தொடக்க விழாவில், வங்கியின் செயல் இயக்குநா் வின்சென்ட், அறக்கட்டளை தலைமை நிா்வாகி முத்தையா, சென்னை ஐஐடி நிா்வாக அதிகாரி ராஜேந்திர மூத்தா, டாக்டா் பாலாஜி ஐயா், கல்லூரி முதல்வா் வீரபாகு, பேராசிரியை கிருஷ்ணபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க