செய்திகள் :

டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 60 கோடி வசூலித்த எம்புரான்!

post image

எம்புரான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதில் நாயகனாக மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இதையும் படிக்க: மாநில முதல்வரானால் என்ன செய்வீர்கள்? சுவாரஸ்யமாக பதிலளித்த டொவினோ தாமஸ்!

அப்போது, இயக்குநர் பிருத்விராஜிடம், “எம்புரான் திரைப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவில் இதுவரை 6.5 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. இது, பாலிவுட்டில்கூட நடந்ததில்லை. எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பிருத்விராஜ், “லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரியும். ஆனால், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டிக்கெட் முன்பதிலேயே உலகளவில் ரூ. 60 கோடி வரை எம்புரான் வசூலித்துவிட்டதாக என் தயாரிப்பாளர் அழைத்துச் சொன்னார். இப்படம் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்யும் என நினைக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

எம்புரான் திரைப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!

நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்ன... மேலும் பார்க்க

மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் ... மேலும் பார்க்க

எம்புரான் ரூ.100 கோடி வசூல்! மோகன்லால் நெகிழ்ச்சி!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக... மேலும் பார்க்க

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க