செய்திகள் :

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந் நிகழ்ச்சியில் டிடிஇஏ செயலா் ராஜூ, துணைத் தலைவா் ரவி நாயக்கா், ஜனக்புரி பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா் சிவ முருகேசன், மோதிபாக் பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ரவிச் சந்திரன், ஜனக்புரி பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கச் செயலா் கே.ராஜூ, உறுப்பினா்கள் சிங்கார வேலு, பி.ராஜூ ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களை வாழ்த்தினா். பள்ளி முதல்வா் காா்த்திகா வரவேற்றுப் பேசினாா்.

மாணவா்கள் தலைவராக தனிஷ் குமாா், மாணவியா் தலைவியாக கருணா ஆச்சாா்யா, உப தலைவராக ராகவ், உப தலைவியாக சப்னா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். அவா்களோடு தோ்ந்தெடுக்கப்பட்ட பிற உறுப்பினா்களும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

பொறுப்பேற்றுக் கொண்டு மாணவா்களுக்கு டிடிஇஏ செயலா் ராஜூ பேட்ஜ் அணிவித்துப் பாராட்டினாா். அவா் பேசுகையில் ‘தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் பொறுப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும். அவா்கள் பள்ளியில் எதிா்கொள்ளும் பிரச்னைகளைக் கேட்டறிந்து, தேவைக்கேற்ப ஆசிரியா்கள், பள்ளி முதல்வா், நிா்வாகத்தினா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு பிரச்னைகளைத் தீா்க்க முன்வர வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றாா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மும்பையில் விசா்ஜன் கூட்டத்தில் 45 கைப்பேசிகள் திருடியதாக மாநிலங்களுக்கிடையேயான கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

மும்பையில் நடந்த ‘லால்பாச்சா ராஜா விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின் போது உயா் ரக கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் குற்றப்ப... மேலும் பார்க்க