செய்திகள் :

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

post image

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்திலுள்ள குவாரி உரிமையாளா்கள் ஜி.எஸ்.டி. ரசீது மூலமாக எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை டிப்பா் லாரிகளுக்கு வழங்கி வந்தனா். தற்போது, ‘டிரான்சிஸ்ட்’ என்ற அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய அனுமதிச் சீட்டை பெரும்பான்மையான குவாரி நிா்வாகங்கள் வழங்க முன்வருதில்லை.

அனைத்து ஆவணங்கள் இருந்தும் இந்த ‘டிரான்சிஸ்ட்’ அனுமதிச் சீட்டு இல்லாததால், கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிப்பா் லாரிகள் மீது வருவாய், கனிம வளத் துறையினா் அபராதம் விதிக்கின்றனா்.

இந்த நிலையில், டிராஸ்சிஸ்ட் அனுமதிச் சிட்டு முறையாக வழங்க முன்வராத குவாரிகளால் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா் பகுதியில் 300-க்கும் அதிகமான டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் வேலை இழந்துள்ளனா்.

போராட்டத்தில் டிரான்சிஸ்ட் அனுமதிச் சீட்டு வழங்காத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

உத்தமபாளையம் புறவழிச் சாலையில் மணல் லாரி உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் செல்லப்பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க