செய்திகள் :

டிரம்ப்புடன் மோடி பேசியது என்ன? விக்ரம் மிஸ்ரி, வெள்ளை மாளிகை அறிக்கைகளில் முரண்! - காங்கிரஸ் கேள்வி

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கும் இந்திய வெளியுறவுச் செயலரின் அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர், வர்த்தகத்தை முன்வைத்து தான் நடத்திய பேச்சுவார்த்தை மூலமே முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இதனை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையிலேயே மோதல் நிறுத்தப்பட்டதாக விளக்கம் அளித்தது. இருப்பினும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜி7 மாநாட்டுக்கு மோடி செல்வதற்கு முன்னதாகவே, ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாதியிலேயே தனது பயணத்தை முடித்துவிட்டு டிரம்ப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் 35 நிமிடங்கள் மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், உரையாடலின் போது, ​​வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக டிரம்ப்பிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் பேசியதாவது:

“இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தகத்தை முன்வைத்து மத்தியஸ்தம் செய்ததாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் 14 முறை டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், கடந்த 37 நாள்களாக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்று டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. டிரம்ப்பிடம் பேசியது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையும் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இரண்டிலும் வேறுபாடு உள்ளது.

அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை, நாங்கள் மத்தியஸ்தத்தை நிராகரிக்கிறோம் என்று டிரம்பிடம் மோடி கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புத் தொடரை கூட்டி, பிரதமர் இதைச் சொல்ல வேண்டும். நாளையே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, டிரம்ப்பிடம் பேசியது பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, ஒற்றுமையை காட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய வெளியுறவு கொள்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

“அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைவர் ஜெனரல் மைக்கேல் குரில்லா, பயங்கரவாதத்தை எதிர்ப்பதில், பாகிஸ்தான் ஒரு தனித்துவமான கூட்டாளி என்று தெரிவித்திருக்கிறார், பாகிஸ்தான் தனித்துவமான குற்றவாளி என்று நாம் சொல்லிக் கொண்டுள்ளோம்.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவ தளபதியை மதிய விருந்துக்கு டிரம்ப் அழைத்திருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கும் அவருக்கும் இடையேயான நேரடி தொடர்பு குறித்து எடுத்துரைத்திருக்க வேண்டும். இந்த சந்திப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். இது இந்தியாவுக்கான அவமானம். நமது வெளியுறவு கொள்கைக்கான பின்னடைவு” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : மத்தியஸ்தம் செய்ததாகப் பேச வேண்டாம்! - டிரம்ப்பிடம் மோடி கறார்

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க