செய்திகள் :

டிரம்ப் அரசின் முக்கிய மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு!

post image

அமெரிக்க அரசு கொண்டுவந்த புதிய மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவை விமர்சித்த 24 மணிநேரத்தில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மசோதா பல்வேறு பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் அதிபர் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மசோதாவில் ட்ரில்லியன் டாலர் வரிச்சலுகை என்பது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க ஊடகத்தில் வெளியான மஸ்க்கின் நேர்க்காணலில், மசோதா குறித்து அவர் பேசியதாவது:

”இதனை அழகான மசோதா என்று அழைப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த மசோதாவில் வரி குறைப்புக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடியேற்ற அமலாக்கம் இருக்கின்றன.

அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும் வகையிலும், அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் பணியை குறைமதிப்பீடு செய்யும் வகையிலும் அமைகிறது.

இந்த மசோதா பெரிதாகவோ அல்லது அழகாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்குமா எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராக பதவி வகிக்க திட்டமிடப்பட்ட நேரம் நிறைவடைந்துவிட்டதாக மஸ்க் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகினார் எலான் மஸ்க்!

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள். மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்... மேலும் பார்க்க

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடைய... மேலும் பார்க்க

நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 34 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரச... மேலும் பார்க்க

சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

சிரியாவின் டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய கடலோர மாகாணங்களின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய மாகாணங்களின், மக்கள் குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ள முன்... மேலும் பார்க்க