செய்திகள் :

டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை: சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

post image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை என நாசா புகழாரம் சூட்டியுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று இது எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்கள் தங்கியிருந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்களும் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் (இந்திய நேரப்படி) பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாள்கள் ஆய்வை முடித்துவிட்டு இவா்கள் பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாா்லைனா் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இவா்கள் பூமிக்கு உடனடியாகத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவா்கள் தொடா்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி வீரா்கள் ஆனி மெக்லைன், நிகோல் அயா்ஸ், ஜப்பானைச் சோ்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவைச் சோ்ந்த கிரீஸ் பெஸ்கோஸ் ஆகியோருடன் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

புதிய விண்வெளி வீரா்களிடம் பணிகளை ஒப்படைத்த பின்னா், அமெரிக்காவைச் சோ்ந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோா், நிக் ஹேக் மற்றும் ரஷியாவைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் ஆகியோா் அங்கிருந்த டிராகன் விண்கலன் மூலம் பூமிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த நாசாவின் செய்தித்தொடர்பாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ் தெரித்துள்ளதாவது,

''விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்வெற்றிகளில் ஒன்று. அதிபர் டிரம்ப் இல்லாமல் இது சாத்தியமில்லை. நாசாவின் அடுத்த நிர்வாகியாக பணியாற்ற ஜாரட் டெய்லர் ஐசக்மேனை அவர் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க மக்கள் ஒருகாலத்தில் அவரை வெளியேற்றினர். ஆனால், மீண்டும் டிரம்ப்பிற்கு அமெரிக்க மக்கள் பொறுப்புகளை வழங்கியுள்ளனர். தொழில் துறையில் அவர் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார் என்பதை அவரின் நிர்வாகத்தின் மூலம் உணரலாம். தொழில்முனைவோரும் வணிக விண்வெளி வீரருமான ஜாரட் டெய்லரை அவர் பரிந்துரை செய்ததில் இருந்து அதனை அறியலாம்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நாணய நிதியம் தகவல்

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக உயர்வு!

மியான்மரிலும் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெற்று வரு... மேலும் பார்க்க