செய்திகள் :

டிரம்ப் - புதின் - ஸெலன்ஸ்கி பேச்சு: உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு! -நரவனே

post image

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதினின் சந்திப்புக்கு பிறகு, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் அலஸ்காவுக்கு சென்ற புதின், டிரம்ப்பை நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதுதொடர்பாக புணேவில் நடைபெற்ற நிகழ்வில் நரவனே பேசியதாவது:

”டிரம்ப் - புதின் சந்திப்பு கலவையான முடிவுகளுடன் நிறைவடைந்தது. இருவருக்கும் இடையே மறைமுகமாக நடந்திருக்கக்கூடிய விஷயங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மகிழ்ச்சியில்லை.

ஸெலன்ஸ்கி - டிரம்ப் இடையே சந்திப்பு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பல பிரதமர்களுடன் அமெரிக்காவுக்கு ஸெலன்ஸ்கி சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு நலன் இல்லாத எவ்வித மறைமுக ஒப்பந்தமும் டிரம்ப் - புதின் இடையே இருக்கக்கூடாது என்று அவர்கள் கவலையில் உள்ளார்கள்.

இது உலகளவில் விளையாடப்படும் மிகப்பெரிய விளையாட்டு. என்ன நடக்கும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. சக்திவாய்ந்த நாடாக இருப்பதால், பலத்தை ஒருதலைபட்சமாக பயன்படுத்தி எல்லைகளை மாற்ற அனுமதிக்கிறீகளா என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தியா அதற்கு எப்போதும் எதிராக உள்ளது.

மோதல்களை பலத்தால் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது. அதனால்தான் நமது பிரதமர், ‘இது போரின் சகாப்தம் அல்ல, போர் கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும்’ எனக் கூறி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

Former Indian Army Chief MM Naravane has said that the Russia-Ukraine ceasefire talks are the biggest game in the world.

இதையும் படிக்க : உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து... மேலும் பார்க்க

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 ... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் த... மேலும் பார்க்க

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறனுடனும், திரை தரத்துடனும் வருவதால், பயனர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்... மேலும் பார்க்க

ஜனநாயகத்தின் பாதுகாவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்குரிமை பேரணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.பிகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொன்ன நிலையில், தான் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.வாக்குத் திருட்... மேலும் பார்க்க