செய்திகள் :

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

post image

இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறனுடனும், திரை தரத்துடனும் வருவதால், பயனர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்ஃபினிக்ஸ் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையில், குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அனைத்து நிறுவனங்களுமே 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்காக இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ என்ற 5ஜி ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில், ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே உள்ளது. 4GB உள்நினைவகம் 128GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 9,299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி வழங்கும் சலுகைகள் கழிய, ரூ. 8,999க்கு ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆக. 21 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போனுக்கு 6.75 அங்குல திரை கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரைக்கு 720 x 1600 பிக்சல் உடன் நீர்புகாத்தன்மைக்காக IP64 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக்டைமன்சிட்டி 6400 புராசஸர் உடையது.

  • நினைவக திறனை 2TB வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

  • பின்புறத்தில் 50MP முதன்மை கேமராவும், செல்ஃபி பிரியர்களுக்காக 5MP முன்பக்க கேமரா உடையது.

  • 6000mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 18W திறன் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 20% வளா்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை

Infinix Hot 60i 5G Launched in India: Price and Specs

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

அசாம் மாநிலத்தில் இன்று(ஆக. 18) பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. நாகோன் மாவட்டத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து... மேலும் பார்க்க

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 ... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் த... மேலும் பார்க்க