செய்திகள் :

இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

post image

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுடனான போரின்போது, கராச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்த கப்பல்கள், வணிக முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானின் சில போர்க்கப்பல்கள் ஈரானில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் மேற்கு துறைமுகமான குவாடருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஏனெனில், பாகிஸ்தானின் போர்க்கப்பல்களைத் தாக்குவது மட்டுமின்றி, போர்க்கப்பல்கள் இருக்கும் கடற்படைத் தளங்களையும் இந்தியா சேதப்படுத்தி விடும் என்று பாகிஸ்தான் அஞ்சியுள்ளது. ஆனால், வணிக முனையங்களில் போர்க்கப்பல்களை நிறுத்தினால், இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். வணிகத் துறைமுகங்களில் வெவ்வேறு நாடுகளின் கப்பல்கள் இருப்பது மட்டுமின்றி, இந்தியா ஒரு மனிதாபிமான நாடு என்பதால் தாக்காது.

போர்க்கப்பல்களை வணிகத் துறைமுகத்துக்கு கொண்டு சென்று, இந்தியாவை வென்று விட்டதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில்தான், மே 8 ஆம் தேதியில் கராச்சி துறைமுகம் குறித்து செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்து புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, மே 7 ஆம் தேதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவுடனான போரில் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் திணறியது. இதனையடுத்து, இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டன.

போரில் பாகிஸ்தான் திணறிய போதிலும், இந்தியாவை வென்றுவிட்டதாக அந்நாட்டினர் தொடர்ந்து பொய்யுரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் வெளியேறிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

As Op Sindoor peaked, Pak Navy took a backseat

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

அசாம் மாநிலத்தில் இன்று(ஆக. 18) பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. நாகோன் மாவட்டத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ப... மேலும் பார்க்க

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 ... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் த... மேலும் பார்க்க

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறனுடனும், திரை தரத்துடனும் வருவதால், பயனர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்... மேலும் பார்க்க